சின்னப் பெண் ஒருத்தி……….

By Nellai Solomon FB nellai-solomon

சின்னப் பெண் ஒருத்தி………………………

அந்தப் பெண் ..ஒடிலான உருவம் ..குச்சி குச்சியாய் கால் கைகள்.
பார்ப்பதற்கு பாவப்பட்ட தோற்றம்.

ஒரு சின்ன கடைக்குள் நான் வேறு ஒரு வேலைக்காக காத்திருந்தேன்..

அது மதிய நேரம் ஆகவே ஆட்கள் இல்லை….
அந்த கடையில் இருந்த ஒருவர் என் வேலைக் காரணமாக பக்கத்து கடைக்கு சென்று விட்டார்..இந்த பெண்பிள்ளை பாவம்போல அங்கே நின்று கொண்டிருந்தாள்…

அவளிடம் இதற்கு முன்னே இரண்டு முறை பேசி இருக்கிறேன்.
ஆனாலும் அது இரண்டு வார்த்தைகளுக்கு மேலே இருக்காது.
இப்போது அவள் மட்டும் இருப்பதால் அவளிடம் அவளைபற்றி தெரிந்து கொள்ள விசாரித்தேன்…
என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டேன்.

ப்ளஸ் டு என்றாள்…..அவள் ஊருக்கு போகும் பஸ் கட்டணத்தை பற்றி கேட்டேன் ..கூறினாள்…..அதுவே மாதம் அறு நூறு ரூபாய் வந்தது…
நெல்லை அருகே உள்ள ஒரு கிராமம்…
..நான் அந்த ஊருக்கு போயிருக்கிறேன்.ஆகவே அந்த ஊரில் எனக்கு தெரிந்தவர்களை பற்றி அவளிடம் விசாரித்தேன்…அவள் பதில் கூறினாள்…

….இப்போது கொஞ்சம் சகஜமான நிலைக்கு வந்திருந்தாள்..

என்னை உற்றுப் பார்த்து .

எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது.அப்பா இல்லை.என் சம்பளத்தை வைத்துதான் சாப்பிடுகிறோம்.
மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலை என்றாள்…

நான் கனிவாக ..கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் மனதை தளரவிடாதே என்று கூறினேன்…

அவள் சினேகமாக சிரித்தாள்…

ஆனால் இத்தனை கஷ்டத்திலும் எனக்கு நல்லதும் நடந்திருக்கிறது என்றாள்…
ஆச்சரியத்துடன் என்னவென்று கேட்டேன்..

அடுத்த மாதம் எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்றாள்..

நான் வாழ்த்துக்கள் என்றேன்….

அவள்…….அதுவும் எங்கள் திருமணம் காதல் திருமணம்.
இரண்டு வருடமாக என்னை ஒருவர் காதலிக்கிறார்.
முதலில் நான் சம்மதிக்கவில்லை.ஆனால் அவரே என்வீட்டில் முறைப்படி வந்து என் அம்மாவிடம் பெண் கேட்டு என் அம்மாவின் சம்மதத்தை வாங்கி விட்டார்.
என்று சந்தோசமாக கூறினாள்……

என்னைப் போன்ற ஏழை பெண்களுக்கு திருமணம் நடக்குமா என்பதே சந்தேகம்.

நான் தினமும் இரவில் தனிமையாக இயேசப்பாவிடம் இதை சொல்லி சொல்லி அழுவேன்.
இயேசப்பா என்ன கைவிடவில்லை என்று சொல்லிவிட்டு ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்
எனக்கு தூக்கி வாறிப்போட்டது..

அவள் அழுவதை பார்த்து அல்ல…

.அவள் இந்து சமயத்தை சேர்த்தவள் என்பதை நான் அறிவேன்.இதில் இயேசப்பா எப்படி இடையில் வந்தார்.. அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்…அவளிடமே கேட்கலாம் என்று .

.நீ இந்து பெண்தானே என்றேன்…
எங்கள் வீட்டில் எல்லோருமே இந்துக்கள்தான்.
நான் மட்டும்; கத்தேலிக்க கிறிஸ்தவளாய் கன்வர்ட் ஆகிவிட்டேன் என்றாள்..

எப்படி என்றேன்.

நான் படித்தது ஒரு கத்தோலிக்க மேல்நிலைப்பள்ளியில் என்றாள்

சரி..நி மணக்கபோகும் அவர் கிறிஸ்தவரா..?
என்றேன்..இல்லை அவர்

இந்துதான்..அப்படி யென்றால் அவருக்கு நீ கிறிஸ்தவளாய் இருப்பதில் சம்மதமா என்றேன்…..

எப்படி இருந்தாலும் திருமணம் நடந்தவுடன் அவரையும் நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள செய்வேன். அது என்னால் முடியும்..

திருமணம் முடிந்தவுடன் முதலில் இந்த பொட்டை அழித்துவிடுவேன்.என்று தன் நெற்றியில் இருக்கும் பொட்டை காட்டினாள்…
அது மட்டுமல்ல கடவுள் எனக்கு செய்யத எல்லா நன்மைகளையும் ஆலயத்தில் எல்லோருக்கும் (சாட்சியாக.).சொல்வேன்..என்றாள்….
இப்போது அவள் முகத்தை பார்த்தேன்..மிக சந்தோசமாக இருந்தாள்….

அந்தக்கடையில் ரிப்பேர் பண்ண நான் கொடுத்திருந்த பொருள் என் கைக்கு வந்து விட்டது..

அவளிடம் அவள் திருமணத்திற்கு வாழ்த்து கூறிவிட்டு கிழம்பினேன்..

அவள் என்னிடம் சந்தோசமாக விடைகொடுத்தாள்….
திடிரென்று என்ன நினைத்தாளோ..

நீங்கள் போலீஸ் வேலைக்கு சேர்ந்திருக்கலாம்..என்று எனக்கு ஜடியா கொடுத்தாள்..(..என் உருவத்தை பார்த்து என்று நினைக்கிறேன்..)

கடையை விட்டு ரோட்டுக்கு வந்து என் பைக் அருகில் நின்று கொண்டு யோசித்தேன்……

.இப்போது நடந்திருப்பது சாதாரண சம்பவம் அல்ல..ஒரு பெண் மனம் மாறுவது என்பது மிகவும் பெரிதான செயல்….அவள் சந்ததியாக …சந்ததியாக பல லட்சம் பேர் பின் நாட்களில் கிறிஸ்துவுக்காக வரலாம்…
இதெல்லாம் எப்படி நடக்கிறது…….

இயேசுகிறிஸ்துவின் மேல் பாசமும் பக்தியும் கொண்டு சாட்சியாக வாழவேண்டும் என்று வைராக்கியம் கொண்டுள்ள அந்த சின்ன பெண்ணுக்காக ஒரு நிமிடம் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன்….

எனக்கு வேதத்தில் ஒரு வசனம் நினைவுக்கு வந்தது….

கர்த்தர் எலியாவைப் பார்த்து …
.பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும் அவனை முத்தஞ்செய்யாதிருக்கின்ற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்……….

இது இந்தியாவுக்கும் பொருந்தும் தானே என்று நினைத்து கொண்டு என் வழியே போனேன்……….

By Nellai Solomon FB

Special டீச்சர்

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் –

“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்

அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –

அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !

அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான்.

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.

இறுதிச் சடங்கில்,

கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான ராணுவ உடையில் –
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் –
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் –

“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக –
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.

ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் –

“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை –
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.

கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !

நீங்களோ, நானோ –
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

வெளிப்படையான பாராட்டுதல் –
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்ப ட உதவும்.

மனிதர்களை மேலும் நல்லவர்களாக
உருவாக்க இது உதவும்..,

Tamil PDF

Tamil Youth Articles in PDF

These articles will help you to choose a right carrier, best job, peaceful life, how to handle a situation, how to manage finance, how to find a true friend, what is love?, what to study, how to study and more of solutions for all your needs.

To download, Right click on the link and select
“Save Target As..”




2009 November Valibar Tholzan Magazine
 
PDF (10 mb)


2009 October Valibar Tholzan Magazine
 
PDF (10 mb)

 




2009 September Valibar Tholzan Magazine
 
PDF (10 mb)


More Articles…

Life Changing True Life Articles by “Seeds”

Seeds – Part 10 455 kb

SEEDS-PART-1 337 kb

SEEDS-PART 2 441 kb

SEEDS-PART-3 484 kb

SEEDS-PART-4 647 kb

SEEDS-PART-5 (Youth Special) 1.12 mb

SEEDS-PART-5 (Youth Special) Small size file 688 kb

SEEDS-PART -6 685 kb

Seeds – Part 7 611 kb

Seeds – Part 8 534 kb

Seeds – Part 9484 kb